noolulagam
அன்பால் இணைவாயோ உயிரே...?
அன்பால் இணைவாயோ உயிரே...?
Couldn't load pickup availability
அகத்தியன் பேர், புகழ், மகிழ்ச்சியோடு... இன்பமாக, ஊரே பார்த்துப் பொறாமைப்படும் வண்ணம் இருந்தான். அவன் ஆசைப்பட்ட புகழ் என்றுமே தத்துத் பிள்ளையாக அவனுடனே வளர ஆரம்பித்தது. அவன் புகழுக்காக நிறையச் செயல்கள் செய்திருந்தாலும், அது பல பேருக்கு நன்மையே விளைவித்திருக்கிறது. அவர் களின் ஆசிர்வாதம் அவனைச் செல்வச் செழிப்போடும் பேர் புகழோடும் இருக்க வைத்தது. புகழும் ஒரு போதையே. எதுவும் அளவோடு இருந் தால்தான் அதை நாம் ஆள முடியும். இல்லை என்றால் அந்தப் போதை நம்மை ஆண்டு விடும். ஒரு தடவை சுகித்தால் அதைத் தக்க வைக்கத்தான் மனித மனம் விரும்பும். வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து கொண்டால் இது போல் எதற்கும் மனம் மயங்காது. இன்று உன்னுடையது, நாளை வேறு ஒருவனுடையது. மாற்றங்கள் வந்து செல்லும். மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதே நிதர்சனம்.
Share
